பதிவு செய்த நாள்
21 மார்2022
22:23
மும்பை:இந்திய பொருளாதாரம், எந்த சவாலையும் சந்திக்கும் வகையில் நன்றாக இருப்பதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற, இந்திய தொழிலக கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர் கூறியதாவது:கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலை உயர்வை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், நமது பொருளாதாரம் உள்ளது. இந்நிலையில், இந்த பாதிப்புகளை சமாளிக்கும் விதமாக, பணப் புழக்கத்துக்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும்.
கொரோனா தாக்கியபோது, மார்ச் 2020ல், ரிசர்வ் வங்கி 17 லட்சம் கோடி ரூபாயை வழங்கி, தொழில்துறைகளுக்கு தேவையான உதவிகளை செய்தது. தற்போது, வங்கிகள் நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் வாராக் கடன், இதுவரை இல்லாத வகையில் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
போர் காரணமாக பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிலை இருப்பினும், அதிக அன்னிய செலாவணி இருப்பு, குறைவான நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவற்றை கொண்டு, ரிசர்வ் வங்கி, எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது.இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|