பதிவு செய்த நாள்
22 மார்2022
20:55
சென்னை:சமூக ஊடக கணக்குகளை பராமரிப்பது, தகவல்களை பகிர்வது ஆகியவற்றுக்காக, தனியார் ஏஜன்சியை பணியில் அமர்த்தும் நடவடிக்கையை, ‘சிப்காட்’ துவங்கி உள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்கள், தங்கள் செயல்பாடுகளை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றன. ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசின், ‘சிப்காட்’ எனும் தொழில் முன்னேற்ற நிறுவனம், மிகவும் பின் தங்கி உள்ளது. டுவிட்டர் பக்கத்தில், 2016ல் இணைந்த சிப்காட், இதுவரை புதிய தகவல்கள் எதையும் பகிரவில்லை.
இதே போல, முகநுால் பக்கங்களிலும் வெளியிடவில்லை.இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கங்களை பராமரிக்கவும், விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபடவும், தனியார் ஏஜென்சியை நியமிக்கும் பணியை சிப்காட் துவங்கி உள்ளது.இந்த பணியில் ஈடுபட விருப்பம் உள்ள தனியார் ஏஜென்சிகள், முன்மொழிவுகளை அனுப்ப, சிப்காட் அதன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதில், சமூக ஊடகங்களில் முழு ஈடுபாட்டுடன் இருப்பதற்கான உத்தியை வகுத்தல், டுவிட்டர், முகநுால், லிங்க்டுஇன் உள்ளிட்டவற்றில் சிப்காட்டிற்கு என, புதிய பக்கத்தை உருவாக்கி, அதை மேலாண்மை செய்ய வேண்டும். இதற்கென, ஒரு நபரை சிப்காட் அலுவலகத்தில், முழுநேர பணியில் அமர்த்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|