பதிவு செய்த நாள்
22 மார்2022
21:05
புதுடில்லி:வரும் ஏப்ரல் – ஜூன் காலாண்டில், பல நிறுவனங்கள் கூடுதலாக ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
‘மேன்பவர்குரூப்’ நிறுவனம், பல்வேறு துறைகளை சேர்ந்த, கிட்டத்தட்ட 3,090 நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 38 சதவீத நிறுவனங்கள், அடுத்த மூன்று மாதங்களில் கூடுதல் ஆட்களை பணியில் நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, புதிய நபர்களை வேலைக்கு எடுப்பது குறித்த நம்பிக்கை நிறுவனங்களிடம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.இருப்பினும், கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது, தற்போதைய நம்பிக்கை குறைவு தான் என மேன்பவர் குரூப் தெரிவித்துள்ளது.
பெண்களை ேவலைக்கு அமர்த்துவது தொடர்ந்து குறைவாகவே இருக்கிறது.தகவல் தொழில்நுட்ப துறை அதிகளவில் புதிய நபர்களை வேலைக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் துறை உள்ளது. இதற்கு அடுத்து கல்வி ஆரோக்கியம், சமூகப் பணி, அரசு ஆகிய துறைகள் அதிக வேலை வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|