பதிவு செய்த நாள்
22 மார்2022
21:13
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், அதன் வர்த்தக வாகனங்களின் விலையை, ஏப்ரல் முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.இந்நிறுவனம், வர்த்தக வாகனங்களின் விலையை 2 – 2.5 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாகவும்; இந்த விலை உயர்வு, வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளதாவது:உருக்கு, அலுமினியம் மற்றும் விலையுயர்ந்த உலோகங்களின் விலை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி; மூலப் பொருட்கள் பலவற்றின் விலையும் உயர்ந்துள்ளன.இதன் பாதிப்பை சரிசெய்யும் நடவடிக்கைகளில் நிறுவனம் இறங்கி உள்ளது.
விலை அதிகரிப்பின் பாதிப்புகளில் ஒரு பகுதியை, தயாரிப்பில் எதிர்கொள்ள முடிந்தாலும், கடுமையான விலை உயர்வை சமாளிக்க, வாகனங்களின் விலையையும் சற்று உயர்த்த வேண்டியதாக உள்ளது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|