பதிவு செய்த நாள்
23 மார்2022
23:05
புதுடில்லி:உலகில் உள்ள எந்த தொலைதொடர்பு நிறுவனத்துக்கும், எப்போது வேண்டுமானாலும், ‘5ஜி’ நெட்வொர்க்கை வழங்கத் தயாராக உள்ளதாக, டி.சி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, நிறுவனத்தின் தகவல் தொடர்பு சேவைகளுக்கான தலைவர், கமல் பதாதா கூறியதாவது:உலகில் உள்ள எந்த தொலைதொடர்பு நிறுவனத்துக்கும், எந்த நாளில் வேண்டுமானாலும் 5ஜி நெட்வொர்க்கை வழங்கும் வகையில் தயாராகி உள்ளது, டி.சி.எஸ்., மேலும், 5ஜி இணைப்பை சப்போர்ட் செய்யும் வகையிலான, 4ஜி சேவைக்காக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் எங்களுடன் பணியாற்றி வருகிறது.
ஆகஸ்ட் 15ம் தேதியன்று, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 4ஜி சேவை அறிமுகம் ஆகும் என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது.அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில் முழுமையாக 5ஜி இணைப்பு வசதி வழங்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கிறேன். அதன் பிறகு, 6ஜி இணைப்புக்கான பணிகள் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|