‘5ஜி’ நெட்வொர்க் வழங்க° டி.சி.எஸ்., நிறுவனம் தயார் ‘5ஜி’ நெட்வொர்க் வழங்க° டி.சி.எஸ்., நிறுவனம் தயார் ...  திருப்பூரின் ஏற்றுமதி இரட்டிப்பாகும் ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை திருப்பூரின் ஏற்றுமதி இரட்டிப்பாகும் ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை ...
வீட்டுக் கடன் அனுமதி எச்.டி.எப்.சி., சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2022
23:11

புதுடில்லி:இதுவரை இல்லாத வகையில், நடப்பு நிதியாண்டில், 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வீட்டுக் கடன்களுக்கான அனுமதியை வழங்கி இருப்பதாக, எச்.டி.எப்.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரேணு சூட் கர்னாட் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில் இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வீட்டுக் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில், வீட்டுக் கடனுக்கான சிறப்பான ஒரு தருணத்தை, இப்போது போல நான் கண்டதில்லை.

குறைவான வட்டிவிகிதம், நிலையான சொத்து விலை, சகாய விலை வீடுகளுக்காக அரசின் ஊக்கம், வாங்கும் தன்மை, அதிகரிக்கும் நகர்ப்புறமயமாக்கல், அதிகரிக்கும் வீடு வாங்கும் ஆர்வம் ஆகியவை காரணமாக, இந்த துறை தற்போது சிறப்பாக உள்ளது.

கடந்த ஓராண்டாக, புதிய வீட்டு வசதி திட்டங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இது கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட அதிகமாகும். நாட்டின் பெரு நகரங்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் தேவை அதிகரித்து வருகிறது.சகாய விலை வீடுகள் பிரிவு, இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து வளர உதவிகரமாக இருக்கும். எச்.டி.எப்.சி., நிறுவனம், கடனுடன் இணைக்கப்பட்ட மானிய திட்டத்தின் அடிப்படையில், 2.7 லட்சம் பேருக்கு மேல் வீட்டுக் கடன் வழங்கி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)