பதிவு செய்த நாள்
23 மார்2022
23:11
புதுடில்லி:இதுவரை இல்லாத வகையில், நடப்பு நிதியாண்டில், 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வீட்டுக் கடன்களுக்கான அனுமதியை வழங்கி இருப்பதாக, எச்.டி.எப்.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரேணு சூட் கர்னாட் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில் இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வீட்டுக் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில், வீட்டுக் கடனுக்கான சிறப்பான ஒரு தருணத்தை, இப்போது போல நான் கண்டதில்லை.
குறைவான வட்டிவிகிதம், நிலையான சொத்து விலை, சகாய விலை வீடுகளுக்காக அரசின் ஊக்கம், வாங்கும் தன்மை, அதிகரிக்கும் நகர்ப்புறமயமாக்கல், அதிகரிக்கும் வீடு வாங்கும் ஆர்வம் ஆகியவை காரணமாக, இந்த துறை தற்போது சிறப்பாக உள்ளது.
கடந்த ஓராண்டாக, புதிய வீட்டு வசதி திட்டங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இது கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட அதிகமாகும். நாட்டின் பெரு நகரங்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் தேவை அதிகரித்து வருகிறது.சகாய விலை வீடுகள் பிரிவு, இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து வளர உதவிகரமாக இருக்கும். எச்.டி.எப்.சி., நிறுவனம், கடனுடன் இணைக்கப்பட்ட மானிய திட்டத்தின் அடிப்படையில், 2.7 லட்சம் பேருக்கு மேல் வீட்டுக் கடன் வழங்கி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|