பதிவு செய்த நாள்
23 மார்2022
23:13
திருப்பூர்:‘மத்திய அரசின் தொடர் உதவியால், அடுத்த மூன்று ஆண்டுக்குள் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி இரட்டிப்பாகும்’ என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்து உள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது: ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கான அவசர கால கடன் திட்டத்தில், கூடுதலாக 10 சதவீதம் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. வட்டி சமன்பாட்டு திட்டம், 2021 அக்., 1ம் தேதி என முன்தேதியிடப்பட்டு, நீட்டிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடப்பு நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிவிடும். தற்போது, இங்கு உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், கடும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன.மூலப்பொருட்கள் விலை உயர்வால், நிறுவனங்களின் நடைமுறை மூலதன தேவை அதிகரித்துள்ளது.
பருத்தி – பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும். பல்வேறு நாடுகளுடனான வரியில்லாத வர்த்தக ஒப்பந்தங்களை நிறைவேற்றித்தர வேண்டும். மத்திய அரசின் இத்தகைய உதவிகள் தொடர்ந்து கிடைத்தால், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், அடுத்த மூன்று ஆண்டுக்குள் இரட்டிப்பாகிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|