பதிவு செய்த நாள்
24 மார்2022
20:39
புதுடில்லி:‘விக்ரம் சோலார்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், ‘சோலார் போட்டோ வோல்டிக் மாட்யூல்’களை தயாரித்து வழங்குகிறது. இந்த மாட்யூல்களை, 32 நாடுகளில் உள்ள நுகர்வோர்களுக்கு வழங்கி வருகிறது.சீனாவிலிருந்து கொள்முதல் செய்து, அமெரிக்கா வாயிலாக பல்வேறு நாடுகளுக்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, இதன் கையில் 4,870 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய் 1,610 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் போது 1,500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 50 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|