பதிவு செய்த நாள்
24 மார்2022
20:50
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய பயணியர் வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, ஹிசாஷி டேக்குசி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, இந்த பொறுப்பை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் கெனிச்சி அயுக்கவாவின் பதவிக்காலம், வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, இப்பொறுப்புக்கு டேக்குசி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
கெனிச்சி அயுக்கவா, நிறுவனத்தின் செயல் துணைத் தலைவராக பொறுப்பேற்று, முழு நேர இயக்குனராக செப்டம்பர் 30ம் தேதி வரை தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும், அவர் நிறுவனத்துக்கு வழிகாட்டு வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக குழு, டேக்குசியை நியமித்து அறிவித்து விட்டாலும், இதற்கு பங்குதாரர்களின் அனுமதியையும் பெற வேண்டியது அவசியமாகும்.
டேக்குசி, சுசூகி மோட்டார் கார்ப்பரேஷனில், 1986ம் ஆண்டில் சேர்ந்தார். மாருதி சுசூகியில், ஏப்ரல் 2021 முதல், வர்த்தக பிரிவின் இணை நிர்வாக இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|