பதிவு செய்த நாள்
25 மார்2022
22:14
சென்னை:'வெராண்டா லேர்னிங் சொலுஷன்ஸ்' நிறுவனம், இம்மாதம் 29ம் தேதியன்று பங்கு வெளியீட்டுக்கு வருவதை முன்னிட்டு, அதன் பங்கின் விலை 130 – 137 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
கல்வி கற்றலுக்கான ஆன்லைன் நிறுவனமான, வெராண்டா லேர்னிங் சொலுஷன்ஸ், பங்கு வெளியீட்டின் வாயிலாக 200 கோடி ரூபாய்நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் புதிய பங்கு வெளியீடு, இம்மாதம் 29ம் தேதியன்று துவங்கி, 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், ஒரு பங்கின் முகமதிப்பு 10 ரூபாய் என்ற அடிப்படையில், பங்கின் விலையை 130 – 137 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.பங்கு வெளியீட்டின் போது, குறைந்தபட்சம் 100 பங்குகள் அல்லது அதன் மடங்குகளில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.கே.எச்.வெஞ்சர்ஸ் கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறையை சேர்ந்த ‘பி.கே.வெஞ்சர்ஸ்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப் பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.மும்பையை சேர்ந்த இந்நிறுவனம், 1.8 கோடி புதிய பங்குகளையும்; நிறுவனர்கள், பங்குதாரர்கள் வசம் இருக்கும் 98 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|