பதிவு செய்த நாள்
25 மார்2022
22:29
புதுடில்லி:பழைய கார்கள் விற்பனை அதிகரித்து வருவதற்கு, விலை மலிவு மற்றும் எளிதாக கிடைக்கும் நிதிவசதி ஆகியவை, முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக, ‘கார்ஸ் 24’ நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பு ஆண்டில், பழைய கார் வாங்குவதற்கான கடன் வசதியும் அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.பழைய கார்களுக்கான, மின்னணு வர்த்தக தளமான கார்ஸ்24 நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பழைய காரை வாங்கும் இளைஞர்களில் 76 சதவீதம் பேர், சராசரியாக 3.5 லட்சம் ரூபாய் அளவுக்கு வாகனக் கடன் வாங்குகின்றனர்.
துவக்கத்தில் பணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்ற வசதி காரணமாக, நடப்பு ஆண்டில், கடன் வழங்குவது மூன்று மடங்கு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது பெண்கள் கார் வாங்குவதும் அதிகரித்து வருகிறது.மிக எளிதான ஆன்லைன் அணுகல் வசதிகள், பழைய கார் விற்பனையை அதிகரிப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு, கார்ஸ் 24 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|