மருத்துவ காப்பீடு கோரல் 257 சதவீதம் அதிகரிப்பு மருத்துவ காப்பீடு கோரல் 257 சதவீதம் அதிகரிப்பு ... வட்டியில் மாற்றம் இருக்காது வட்டியில் மாற்றம் இருக்காது ...
சந்தைகளிலிருந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2022
22:17

புதுடில்லி : நடப்பு ஆண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை, இந்திய சந்தைகளிலிருந்து 1.15 லட்சம் கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.

புவிசார் அரசியல் சூழல் காரணமாகவும், பணவீக்க அச்சுறுத்தல் காரணமாகவும், இவர்கள் தங்கள் முதலீடுகளை தொடர்ந்து வெளியே எடுத்து வருகின்றனர்.நடப்பு மார்ச் மாதத்தில், பங்குச் சந்தை முதலீடுகளிலிருந்து மட்டும், இதுவரை கிட்டத்தட்ட 48 ஆயிரத்து 250 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் இந்த ஆண்டில் வெளியே எடுத்த முதலீட்டின் மதிப்பு 1.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பணவீக்க அதிகரிப்பு ஆகியவையே, அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை வெளியே எடுப்பதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆறு மாதங்களாகவே, அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)