பதிவு செய்த நாள்
28 மார்2022
22:17
புதுடில்லி : நடப்பு ஆண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை, இந்திய சந்தைகளிலிருந்து 1.15 லட்சம் கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.
புவிசார் அரசியல் சூழல் காரணமாகவும், பணவீக்க அச்சுறுத்தல் காரணமாகவும், இவர்கள் தங்கள் முதலீடுகளை தொடர்ந்து வெளியே எடுத்து வருகின்றனர்.நடப்பு மார்ச் மாதத்தில், பங்குச் சந்தை முதலீடுகளிலிருந்து மட்டும், இதுவரை கிட்டத்தட்ட 48 ஆயிரத்து 250 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர். இதையடுத்து, இவர்கள் இந்த ஆண்டில் வெளியே எடுத்த முதலீட்டின் மதிப்பு 1.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பணவீக்க அதிகரிப்பு ஆகியவையே, அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை வெளியே எடுப்பதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆறு மாதங்களாகவே, அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|