பதிவு செய்த நாள்
28 மார்2022
22:21
புதுடில்லி : கொரோனா பாதிப்புகள் காரணமாக, புதிய வாகனங்கள் வாங்கும் முடிவை, பலர் தள்ளி வைத்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
‘கார் டிரேட் டெக்’ நிறுவனம், வாகனங்கள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்புகள் காரணமாக, பெரும்பாலான நுகர்வோர்கள், புதிய வாகனங்கள் வாங்கும் திட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.நான்கு சக்கர வாகனத்தை பொறுத்தவரை, 80 சதவீதம் பேர் திட்டத்தை தள்ளிப் போட்டுள்ளனர். இரு சக்கர வாகன பிரிவில், 82 சதவீதம் பேர் வாங்கும் முடிவை தள்ளி வைத்துள்ளனர்.
இருசக்கர மின்சார வாகனத்தை பொறுத்தவரை, 40 சதவீதம் பேர், நடப்பு ஆண்டில் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இது, கடந்த ஆண்டு நிலையை விட சிறிது முன்னேற்றமாகும்.அதேசமயம், நான்கு சக்கர மின்வாகனத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டை போலவே, 33 சதவீதம் பேரே வாங்க விருப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான நுகர்வோர்கள் மின்சார வாகனங்களின் பயன்கள் குறித்து நன்கு அறிந்துள்ளனர். அதேசமயம், சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பது குறித்து கவலை தெரிவித்தனர்.நுகர்வோர் புதிய வாகனங்கள் வாங்குவதில் விருப்பமாக இருக்கிறார்கள். ஆனால், பலவித காரணிகள் அதற்கு தடையாக இருக்கின்றன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|