பதிவு செய்த நாள்
29 மார்2022
07:15
மும்பை: அடுத்த மாதத்திலிருந்து, வீடுகளின் விலையை, 10 – 15 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு பில்டர்கள் தள்ளப்பட்டுள்ளதாக, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்க கூட்டமைப்பான ‘கிரெடாய்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த 45 நாட்களில், கட்டுமான செலவுகள் 20 – 25 சதவீதம் அதிகரித்து விட்டது. குறிப்பாக, உருக்கு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. உருக்கின் விலை, ஒரு கிலோவுக்கு 35 – 40 ரூபாய் என்றிருந்த நிலை மாறி, இப்போது 85 – 90 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் எரிபொருள், போக்குவரத்து செலவு ஆகியவையும் அதிகரித்து விட்டன. ஒட்டுமொத்த கட்டுமான செலவு 20 – 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.இதனால், பில்டர்கள் விலையை 10 – 15 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.கட்டுமான செலவு உயர்ந்துள்ளது, லாப வரம்பை மிகவும் குறைப்பதாக உள்ளது. இந்த சூழல், சகாய விலை வீடு பிரிவை மிகவும் பாதிப்பதாக உள்ளது.
மாநில அரசுகள், பத்திர பதிவுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். முக்கியமான மூலப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யையும் குறைக்க வேண்டும். மேலும் மேம்பாட்டாளர்கள், உள்ளீட்டு பொருட்களுக்கான வரியை, திரும்ப பெறவும் வகை செய்து தரவேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|