பதிவு செய்த நாள்
29 மார்2022
19:55
புதுடில்லி:இந்தியாவின் அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை, குறைத்து அறிவித்துள்ளது, உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான ‘இக்ரா’.
7.2 சதவீதம்
இதற்கு முன், நாட்டின் வளர்ச்சி, அடுத்த நிதிஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை, 7.2 சதவீதமாக குறைத்து அறிவித்துஉள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. மத்திய புள்ளியியல் அலுவலகம், நாட்டின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 8.9 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.உக்ரைன் மீதான போரினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம், பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை, நாட்டின் தேவையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என, இக்ரா தெரிவித்துள்ளது.
பாதிப்பு
புவிசார் அரசியல் பிரச்னைகள் மற்றும், சீனாவில் மீண்டும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப் படுவது ஆகியவை, பொருட்களின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக, இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.தனியார் முதலீடுகள் அதிகரிப்பது தாமதமாகி வருவதாகவும், தொழில்துறை, அதன் உற்பத்தி திறனில் 74 – 75 சதவீதத்தை, அடுத்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தான் எட்ட முடியும் என்றும், இக்ரா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|