பதிவு செய்த நாள்
29 மார்2022
19:58
கோல்கட்டா:நாட்டின் மிகப் பெரிய சுரங்க தொழில் நிறுவனமான ‘கோல் இந்தியா’, நடப்பு நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு, உற்பத்தியை மேற்கொண்டுள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி, நடப்பு நிதியாண்டில், இம்மாதம் 28ம் தேதி நிலவரப்படி, இது வரை இல்லாத சாதனை அளவாக, 62 கோடி டன் ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த இரு ஆண்டுகளாக உற்பத்தி சரிந்து வந்த நிலையில், இப்போது இந்த சாதனை படைக்கப்பட்டுஉள்ளது.
நடப்பு நிதியாண்டின் இறுதியில், உற்பத்தி 62.2 கோடி டன்னை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும், இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.மேலும், நடப்பு நிதிஆண்டில் நிலக்கரி வினியோகம் 66 கோடி டன் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், கோல் இந்தியாவின் உற்பத்திக்கான இலக்கு 67 கோடி டன் என நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. துவக்கத்தில் இது, 64 கோடி டன் ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.கடந்த 2019 – 20ல், இந்நிறுவனம், 60.2 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|