பதிவு செய்த நாள்
29 மார்2022
20:04
துபாய்:வரும் ஆண்டுகளில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையினர், ஓராண்டுக்கான ஏற்றுமதி இலக்கை, 7.60 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என, மத்திய வர்த்தகதுறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.
நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் உறுப்பினர்களிடம் பேசும்போது அவர் மேலும் கூறியதாவது:இந்த துறையானது, ஏற்றுமதி இலக்கை 100 பில்லியன் டாலர் அதாவது, 7.6 லட்சம் கோடி ரூபாயாக, வரும் ஆண்டு களில் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த ஏற்றுமதியான 30.40 லட்சம் கோடி ரூபாயில், கிட்டத் தட்ட 10 சதவீதம் இந்த துறையை சார்ந்ததாகும். அரசு இந்த துறையின் ஏற்றுமதிக்கான வளர்ச்சி வாய்ப்புகளை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகின் பிற நாடுகளில் ஏற்படுத்தி கொடுக்கும்.
இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இது மே மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.இது, இந்தியாவின் ஜவுளி, மருந்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|