பதிவு செய்த நாள்
29 மார்2022
20:09
மும்பை:நாட்டின் மிகப் பழைமை வாய்ந்த பங்குச் சந்தையான, ‘மும்பை பங்குச் சந்தை’, புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு தகுதி வாய்ந்த நபரை தேடத் துவங்கி உள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் தற்போதைய நிர்வாக இயக்குனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அஷிஷ் குமார் சவுகான் பதவிக்காலம், நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய நபருக்கான தேடலை சந்தை துவங்கி உள்ளது.இதற்கான விண்ணப்பத்தை பெறுவதற்கான கடைசி தேதி, ஏப்ரல் 23 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாட்டில் அதிகளவில் பங்கு வர்த்தகம் நடைபெறும் சந்தையான, ‘தேசிய பங்குச் சந்தை’யும் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவிக்கான புதிய நபரை தேடும் முயற்சியில் அண்மையில் இறங்கி உள்ளது.இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், சவுகானும், தேசிய பங்குச் சந்தை பதவிக்கான போட்டியில் இருக்கிறார் என்பது தான்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|