பதிவு செய்த நாள்
29 மார்2022
20:10
புதுடில்லி:வேளாண் வேதியியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ஹிமானி இண்டஸ்ட்ரீஸ்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
பொருளாதார பாதிப்புபுவிசார் அரசியல் காரணங்களால், உலகளவில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும், இந்தியாவில், நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதில் காட்டும் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அந்த வகையில், இப்போது ஹிமானி இண்டஸ்ட்ரீஸ், பங்கு வெளியீட்டுக்கு வர விண்ணப்பித்துஉள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 2 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது, 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூலதன செலவுதிரட்டப்படும் நிதியை கொண்டு, கடன்களை அடைக்கவும், விரிவாக்கத்துக்கு தேவைப்படும் மூலதன செலவுகளுக்காகவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்காகவும் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஜே.எம்., பைனான்ஷியல்’ மற்றும் ‘கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல்’ ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|