பதிவு செய்த நாள்
30 மார்2022
20:43
புதுடில்லி:ரஷ்ய மத்திய வங்கி அதிகாரிகள், விரைவில் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சந்தித்து, பேச்சு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவுக்கு எதிராக உலகநாடுகள் பல தடைகளை அறிவித்து வருவது ஒருபக்கம் இருப்பினும் , இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகம் மற்றும் வங்கி நடவடிக்கைகளை தக்கவைக்க உதவும் வகையிலான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க, இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ரஷ்யாவிலிருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவதற்காக, பிரத்யேகமான பணம் செலுத்தும் வசதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.ரூபாய் – ரூபிள் பரிமாற்ற சேனலை உருவாக்குவது குறித்தும், பேச்சு நடைபெறும் என்பதால், ரஷ்யாவிலிருந்து வரும் குழுவில், நிதி துறையை சேர்ந்த அதிகாரிகளும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய வங்கிகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்திருக்கும் நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் வெளிவிவகார துறையினரையும், ரஷ்ய குழுவினர் சந்திக்க கூடும் என தெரிகிறது.இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, ரூபாய் – ரூபிள் வர்த்தகம் குறித்து, கொள்கையளவில் தன்னுடைய சம்மதத்தை தெரிவித்துவிட்டது. இனி, அதற்கு தேவையான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அந்த திசையில்தான் முதல் சந்திப்பு இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|