பதிவு செய்த நாள்
30 மார்2022
20:44
புதுடில்லி:தங்க நகை சில்லரை விற்பனையாளர்களின் வருவாய், அடுத்த நிதியாண்டில் 12 –15 சதவீதம் அதிகரிக்கலாம் என, தர நிர்ணய நிறுவனமான ‘கிரிசில்’ அறிவித்துள்ளது.
இது குறித்து, கிரிசில் மேலும் தெரிவித்துள்ளதாவது:நிலையான தேவை மற்றும் அதிகரித்துள்ள விலை ஆகியவை காரணமாக, தங்க நகை சில்லரை விற்பனையாளர்களின் வருவாய், அடுத்த நிதியாண்டில் 12 – 15 சதவீதம் அதிகரிக்க கூடும்.நடப்பு நிதியாண்டில், வருவாய் 20 – 22 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய காலாண்டில், கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட குறைந்த அடிப்படையால், இந்த வளர்ச்சி எட்டப்படும்.அடுத்த நிதியாண்டில், ஆபரண தேவை நிலையானதாக இருக்கும். மேலும், கொரோனாவுக்கு முந்தைய காலத்தில், தங்கத்தின் தேவை 600 – 650 டன்னாக இருந்தது. இது அடுத்த நிதியாண்டில் 8 – 10 சதவீதம் அதிகரிக்க கூடும்.மேலும், வணிக விரிவாக்க நடவடிக்கைகளும் அடுத்த நிதியாண்டில் அதிகரிக்கும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|