பதிவு செய்த நாள்
30 மார்2022
20:47
மும்பை:அடுத்த நிதியாண்டில், ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம், 6 முறை கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதல் கூட்டம், ஏப்ரல் 6 – 8 தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் தலைமையிலான, 6 உறுப்பினர்களை கொண்ட பணக் கொள்கை குழு கூட்டம், இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி, வட்டி விகிதம் குறித்த தன்னுடைய முடிவை அறிவிப்பது வழக்கம்.சில்லரை விலை பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைகளை பொறுத்து, ரிசர்வ் வங்கி, வட்டிவிகிதம் குறித்த முடிவுகளை மேற்கொள்ளும். அந்த வகையில், அடுத்த நிதியாண்டின் முதல் கூட்டம், ஏப்ரல் 6 – 8 தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8ம் தேதி கூட்டத்தின் முடிவுகள் அறிவிக்கப்படும்.இரண்டாவது கூட்டம், ஜூன் 6 – 8 தேதிகளிலும்; மூன்றாவது கூட்டம், ஆகஸ்ட் 2 – 4 தேதிகளிலும் நடைபெறும் என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, சில்லரை விலை பணவீக்கத்தை, 4 சதவீதமாக பராமரிக்கும்படி, ரிசர்வ் வங்கிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது 4 சதவீதத்திலிருந்து, 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது, குறைவாகவோ இருக்கலாம். அதாவது, 2 – 6 சதவீதமாக பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|