பதிவு செய்த நாள்
31 மார்2022
20:09
புதுடில்லி:‘யதார்த் ஹாஸ்பிட்டல் அண்டு ட்ரோமா கேர் சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், டெல்லி தலைநகர் பிராந்தியத்தில், தனியார் மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. அங்கு இதற்கு 3 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உள்ளன. விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, அண்மை யில் மத்தியபிரதேசத்திலும் மருத்துவமனையை துவங்கி உள்ளது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் போது 610 கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய பங்குகளை விற்பனைக்கு விடுக்க உள்ளது.
மேலும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் உள்ள 65.51 லட்சம் பங்குகளையும், விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, சில கடன்களை திருப்பி செலுத்தவும், மூலதன செலவுகளுக்காகவும் பயன்படுத்த உள்ளதாகவும் இந்நிறுவனம் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|