பதிவு செய்த நாள்
31 மார்2022
20:12
மும்பை:‘சிட்டி’ வங்கி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், அவர்களின் வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் இதர வணிகங்களை அவர்கள் விரும்பும்பட்சத்தில், ‘ஆக்சிஸ்’ நிர்வாகத்தின் கீழ் தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெபாசிட்டு
வாடிக்கையாளர்கள் அப்படி தொடர விருப்பப்படாவிட்டால், தங்களுடைய டெபாசிட்டுகளுடன் வெளியேறிக் கொள்ளலாம் என்றும், ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது. சிட்டி பேங்க் நிறுவனத்துக்கு, இந்தியாவில் 30 லட்சம் கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவ்வங்கியின் சில்லரை வணிகத்தை, 12 ஆயிரத்து 325 கோடி ரூபாய்க்கு, ஆக்சிஸ் வங்கி கையகப்படுத்தி உள்ளது.
இதையடுத்து, ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சவுத்ரி, ‘சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள், அவர்களது ரிவார்டுகள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து பெறுவர்’ என்று தெரிவித்துஉள்ளார்.
ஒப்புதல்
கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதி கிடைத்து, இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் முடிவுற்றதும், சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள், ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளராக மாற ஒப்புதல் வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் முடிய, 9 – 12 மாதங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|