பதிவு செய்த நாள்
01 ஏப்2022
20:49
புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், இதுவரை இல்லாத வகையில், 1.42 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
கடந்த மார்ச் மாத வசூல், முந்தைய ஆண்டின் மார்ச் மாதத்தை விட, 15 சதவீதம் அதிகரித்து உள்ளது.வரி வருவாய் குறித்து அமைச்சரகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக, வருவாய் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், வரி ஏய்ப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால், வரி வசூல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மார்ச்சில், மொத்தம் 1 லட்சத்து 42 ஆயிரத்து 95 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதில், மத்திய ஜி.எஸ்.டி., 25 ஆயிரத்து 830 கோடி ரூபாய் ஆகும். மாநில ஜி.எஸ்.டி., வகையில் 32 ஆயிரத்து 378 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., வகையில் 74 ஆயிரத்து 470 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
அத்துடன் கூடுதல் வரியாக 9,417 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.இதற்கு முன், கடந்த ஜனவரியில், அதிகபட்சமாக 1.41 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது. தற்போது மார்ச்சில் அந்த சாதனை முறியடிக்கப் பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|