பதிவு செய்த நாள்
01 ஏப்2022
20:54
மும்பை:புதிய நிதியாண்டின் முதல் நாளில், பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்ததை அடுத்து, சில்லரை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.
கடந்த நிதியாண்டில் கொரோனா, போர் என பல பாதிப்புகளை சந்தித்தாலும், ஒட்டுமொத்தத்தில் சந்தை நல்ல வளர்ச்சியையே காட்டியுள்ளது. இந்நிலையில், புதிய நிதியாண்டு ஏற்றத்துடன் துவங்கியிருப்பதை அடுத்து, இந்த நிதியாண்டிலும் சந்தை சிறப்பான வளர்ச்சி காணும் எனும் நம்பிக்கை, முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’ 708 புள்ளிகள் அதிகரித்து, 59 ஆயிரம் புள்ளிகள் எனும் நிலையை மீட்டெடுத்துள்ளது.தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’ 205 புள்ளிகள் அதிகரித்து, 17 ஆயிரத்து 670 என்ற நிலையை எட்டி உள்ளது.
கடந்த முழு நிதியாண்டில், ‘சென்செக்ஸ்’ குறியீடு 9,059 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது, 18.29 சதவீத உயர்வாகும்.இதேபோல், நிப்டியும் 2,774 புள்ளிகள் அதாவது, 18.88 சதவீதம் உயர்வை கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|