பதிவு செய்த நாள்
01 ஏப்2022
20:56
புதுடில்லி:நிதி சேவைகள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள, ‘கே – பின் டெக்னாலஜிஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துஉள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,400 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நிதி சேவை
இப்பங்கு வெளியீட்டின்போது, இந் நிறுவனம் புதிய பங்குகள் எதையும் விற்பனை செய்யவில்லை. முழுக்க, நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய உள்ளது.இந்நிறுவனம், பல்வேறுவிதமான நிதி சேவைகளை வழங்கி வருகிறது.
மியூச்சுவல் பண்டு, தனியார் ஓய்வு திட்டங்கள் ஆகியவற்றிலும் தீர்வுகளை வழங்கி வருகிறது.இந்தியாவில் மட்டு மின்றி, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளிலும், நிதி சேவைகளை வழங்கி வருகிறது.
24 நிறுவனங்கள்
இந்தியாவில், மியூச்சுவல் பண்டு துறையில், மொத்தம் 42 சொத்து மேலாண்மை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில், 25 நிறுவனங்களுக்கு தேவையான சேவைகளை கே – பின் வழங்கி வருகிறது. மொத்த மியூச்சுவல் பண்டு சந்தையில், 60 சதவீத பங்களிப்பு, இந்த 24 நிறுவனங்கள் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|