பதிவு செய்த நாள்
01 ஏப்2022
21:10
மும்பை,:வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீண்டும் ஒரு விலை உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்கள் தயாரிப்பில், நாட்டின் மிகப் பெரிய நிறுவனமான ‘மாருதி சுசூகி’, மேலும் ஒரு விலை உயர்வை அறிவிக்க திட்டமிட்டு வருகிறது. மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதை அடுத்து, விலையை மீண்டும் உயர்த்தலாம் என இந்நிறுவனம் கருதுகிறது.கடந்த ஆண்டு ஜனவரி முதல், இந்நிறுவனம் இதுவரை கிட்டத்தட்ட 9 சதவீதம் அளவுக்கு, கார்களின் விலையை உயர்த்தி உள்ளது.
இதுவரை, ஓராண்டில் இந்த அளவுக்கு விலையை இப்படி உயர்த்தியதில்லை.இந்நிலையில், மேலும் ஒரு விலை உயர்வு அறிவிப்புக்கு இந்நிறுவனம் தயாராகி வருகிறது.மாருதி மட்டுமின்றி, பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உருக்கு, அலுமினியம், அரிதான உலோகங்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தற்போதைய புவிசார் சூழல் காரணமாக, பொருட்கள் விலை மேலும் விலை உயரும் பட்சத்தில், மீண்டும் விலை உயர்வு அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|