பதிவு செய்த நாள்
01 ஏப்2022
21:13
புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், வாகனங்கள் விற்பனை, சில நிறுவனங்களில் ஏற்றத்தையும், சில நிறுவனங்களில் சரிவையும் ஏற்படுத்தி உள்ளது.
‘மாருதி சுசூகி’ விற்பனை 2 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள ‘ஹூண்டாய்’ நிறுவனம் 14 சதவீத சரிவை சந்தித்துள்ளது. மார்ச் மாதத்தில் சரிவைக் கண்டிருப்பினும், கடந்த முழு நிதியாண்டில் 13 சதவீத உயர்வை கண்டுள்ளது,
மாருதி சுசூகி. இதன் ஏற்றுமதியும், கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. மொத்தம் 2.38 லட்சம் வாகனங்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்து உள்ளது.‘செமிகண்டக்டர் சிப்’ கிடைப்பதில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, கடந்த நிதியாண்டில் பல நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.நடப்பு நிதியாண்டிலும் வாகன உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்படலாம் என, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|