‘பாலிமர் பூங்கா’வில் நிலம் விண்ணப்பிக்க அழைப்பு ‘பாலிமர் பூங்கா’வில் நிலம் விண்ணப்பிக்க அழைப்பு ...  அலுவலக இடங்கள் குத்தகை  இரு மடங்கு அதிகரிப்பு அலுவலக இடங்கள் குத்தகை இரு மடங்கு அதிகரிப்பு ...
கடந்த நிதியாண்டு: அள்ளி கொடுத்த சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2022
19:43

மும்பை:கடந்த நிதியாண்டில், பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு, 59.75 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்த காலகட்டத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 19 சதவீதம் உயர்ந்தது. இதன் காரணமாக, முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பும் அதிகரித்தது.கடந்த நிதியாண்டின் இரண்டாவது பாதியில், சந்தை பல்வேறு தடைகளை சந்தித்தபோதும், ஆண்டு இறுதியில், சென்செக்ஸ் 9,059 புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

புவிசார் அரசியல் பதற்றம், பணவீக்க அதிகரிப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறியது என பல தடைகள் ஏற்பட்ட போதும், சந்தை சாதனை படைத்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 59.76 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 264 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.கொரோனா தாக்கம் குறைந்து, பொருளாதார மீட்சி துவங்கியதை அடுத்து, சந்தையில் நம்பிக்கை பெருகியது.இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை உறுதிபடுத்தும் விதமாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சொத்து மதிப்பு, கடந்த ஜனவரி 17ம் தேதி நிலவரப்படி, 280 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.மேலும், சென்செக்ஸ், அதன் சரித்திரத்தில் இல்லாத வகையில், கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று, 62 ஆயிரத்து 245 புள்ளிகளை தொட்டது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டை பொறுத்தவரை, அதிகமான பணவீக்கம், புவிசார் பிரச்னைகள், வட்டி விகித அதிகரிப்பு போன்ற காரணங்களால், சந்தை, ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)