பதிவு செய்த நாள்
03 ஏப்2022
19:24
இந்திய இளம் தலைமுறையினரில் பெரும்பாலானோர் நிதி ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதும், பலரும் தங்கள் சேமிப்பை அதிகரித்திருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புத்தாயிரம் தலைமுறை என்று குறிப்பிடப்படும், 22 முதல் 35 வயது வரையான இளைஞர்கள் மத்தியில் நிதி பழக்கங்களை கண்டறிவதற்காக டாடா ஏ.ஐ.ஏ., லைப் நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில் 64 சதவீதம் பேர் பெருந்தொற்று காலத்திலும் தங்கள் சேமிப்பை தொடர்ந்ததாக அல்லது அதிகரித்ததாக தெரிவித்துள்ளனர்.இளம் வயதிலேயே நிதி விழிப்புணர்வை பெற்றிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் இளம் தலைமுறையினர் பெரும்பாலும் தாங்களே சுயமாக நிதி முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில், 95 சதவீதம் பேர் பெற்றோர் துணையில்லாமல் தாங்களே நிதி முடிவுகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களில் அதிகமானோர் நிதி விஷயங்களில் சுயேச்சையாக செயல்படும் தன்மை கொண்டு உள்ளனர். மேலும், 43 சதவீதம் பேர் போதுமான காப்பீடு பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், கணிசமானோர் தங்கள் பாலிசி அளவு போதுமானதா என்பது உறுதியாக தங்களுக்கு தெரியவில்லை எனக் கூறியுள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|