வர்த்தக துளிகள்வர்த்தக துளிகள் ...  ஆயிரம் சந்தேகங்கள் வீட்டுக் கடன் வரம்பு  எப்படி தீர்மானிக்கப்படுகிறது? ஆயிரம் சந்தேகங்கள் வீட்டுக் கடன் வரம்பு எப்படி தீர்மானிக்கப்படுகிறது? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்கள் கடன் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2022
19:46

வங்கி கடன் பெறும் போது ‘கிரெடிட் ஸ்கோர்’ முக்கிய அம்சமாக அமைவதை நீங்கள் அறிந்திருக்கலாம். கிரெடிட் ஸ்கோர் என்பது ஒருவரது கடன் தகுதியை உணர்த்தும் வகையில் அமைவதால், வங்கிகள் இதை கடன் வழங்கும் போது கவனத்தில் கொள்கின்றன.


இந்த காரணத்தால் கிரெடிட் ஸ்கோரை அறிவதிலும், அதை ஆரோக்கியமாக வைத்து இருப்பதும் அவசியம் ஆகிறது. ஆனால், சில நேரங்களில் வலுவான கிரெடிட் ஸ்கோர் இருப்பவர் விண்ணப்பத்தையும் வங்கி நிராகரிக்கலாம். இதற்கான காரணங்களை அறிவது கடன் செயல்முறையை புரிந்து கொள்ள உதவும்.

மாத வருமானம்:


வேலைவாய்ப்பு மற்றும் கடனை அடைக்கும் வகையில் வருமானத்தை பெற்றிருப்பது, கடன் தகுதிக்கான முக்கிய அம்சங்களில் ஒன்று. கடனுக்காக விண்ணப்பிக்கும் போது வேலைவாய்ப்பு தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் அடிப்படையில் இடர் தன்மை தீர்மானிக்கப்படலாம். இதன் காரணமாகவும் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.


பழைய விபரங்கள்:


கிரெடிட் ஸ்கோரை வழங்கும் நிறுவனங்கள் கடன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசீலிக்கின்றன. வங்கிகள் தங்கள் தரப்பில் கூடுதலாக பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்கின்றன. அதன்படி, விண்ணப்பிப்பவரின் கடந்த கால செயல்பாடுகள் மோசமாக இருந்தாலும் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.


கடன் சுமை:


ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடனுக்கான விசாரணையை மேற்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தலாம். அதே போல ஏற்கனவே கடன் பெற்றிருக்கும் போது புதிதாக கடனுக்கு விண்ணப்பித்தால், அதிக அளவில் கடன் பெறுவதாக கருதப்பட்டு, இதன் காரணமாகவும் கோரிக்கை மறுக்கப்படலாம்.


வங்கி கொள்கை:


ஒருவரது கிரெடிட் ஸ்கோர் வலுவாக இருந்து, மற்ற அம்சங்களும் சரியாக இருந்தாலும் கூட சில நேரங்களில் கடன் மறுக்கப்படலாம். வங்கி கடன் கொள்கை இதற்கு காரணமாகலாம். குறிப்பிட்ட காலத்திற்கான கடன் வரம்பு முடிந்துவிட்ட நிலையில், கடன் மறுக்கப்படலாம். இது கடன் கோருபவரின் தவறு அல்ல.


கவனம் தேவை:


சொத்தின் ஒரு பகுதி அடமானத்தில் இருப்பதை வங்கி பாதகமான அம்சமாக கருதலாம். ஈட்டுறுதி பெற்ற கடன் மற்றும் ஈட்டுறுதி இல்லாத கடனுக்கான விகிதமும் தாக்கம் செலுத்தலாம். கடன் வழங்குவது தொடர்பாக வங்கிகள் தெளிவான விதிமுறைகளை கொண்டுள்ளன. எனவே, நிதி விஷயங்களை கையாளுவதில் கவனமாக இருப்பது கடன் தகுதியை வலுவாக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)