பதிவு செய்த நாள்
06 ஏப்2022
20:41
புதுடில்லி:‘பியூச்சர் ரீடெய்ல் – அமேசான்’ வழக்கை விசாரிக்க, சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
கிஷோர் பியானியின் பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை, முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ்’ குழுமம், 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த ஒப்பந்தம் செய்தது.இதை எதிர்த்து அமேசான் இந்தியா நிறுவனம், சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பை பெற்றது.
இதை எதிர்த்து பியூச்சர் ரீடெய்ல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், மத்தியஸ்த தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதை நீக்கக் கோரி அமேசான் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:பியூச்சர் – அமேசான் வழக்கு தொடர்பான மத்தியஸ்த நடவடிக்கைகளை, சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம் துவக்க அனுமதிக்கப் படுகிறது. பியூச்சர் குழுமம், மத்தியஸ்தம் மற்றும் நல்லிணக்க சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவை, சிங்கப்பூர் தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும். அந்த சட்டத்தின் கீழ், இந்த வழக்கு தொடர்பான மேல்நடவடிக்கைகள் தேவையற்றது அல்லது தொடர முடியாது என தீர்ப்பாயம் கருதினால், உரிய உத்தரவு பிறப்பிக்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வாடகை செலுத்தாத பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின், ‘பிக் பஜார்’ கடைகளை ரிலையன்ஸ் கையகப்படுத்தி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|