தொடர்ந்து 8 மாதங்களாக சேவைகள் துறை வளர்ச்சி தொடர்ந்து 8 மாதங்களாக சேவைகள் துறை வளர்ச்சி ...  வணிக துளிகள் வணிக துளிகள் ...
‘பியூச்சர் – அமேசான்’ வழக்கு: தடையை நீக்கியது நீதிமன்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2022
20:41

புதுடில்லி:‘பியூச்சர் ரீடெய்ல் – அமேசான்’ வழக்கை விசாரிக்க, சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
கிஷோர் பியானியின் பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை, முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ்’ குழுமம், 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த ஒப்பந்தம் செய்தது.இதை எதிர்த்து அமேசான் இந்தியா நிறுவனம், சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பை பெற்றது.
இதை எதிர்த்து பியூச்சர் ரீடெய்ல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், மத்தியஸ்த தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதை நீக்கக் கோரி அமேசான் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:பியூச்சர் – அமேசான் வழக்கு தொடர்பான மத்தியஸ்த நடவடிக்கைகளை, சிங்கப்பூர் சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம் துவக்க அனுமதிக்கப் படுகிறது. பியூச்சர் குழுமம், மத்தியஸ்தம் மற்றும் நல்லிணக்க சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவை, சிங்கப்பூர் தீர்ப்பாயம் விசாரிக்க வேண்டும். அந்த சட்டத்தின் கீழ், இந்த வழக்கு தொடர்பான மேல்நடவடிக்கைகள் தேவையற்றது அல்லது தொடர முடியாது என தீர்ப்பாயம் கருதினால், உரிய உத்தரவு பிறப்பிக்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, வாடகை செலுத்தாத பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின், ‘பிக் பஜார்’ கடைகளை ரிலையன்ஸ் கையகப்படுத்தி வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)