பதிவு செய்த நாள்
09 ஏப்2022
21:17
புதுடில்லி:‘ருச்சி சோயா’ நிறுவனம், கடன் இல்லா நிறுவனமாகி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ருச்சி சோயா, தன்னுடைய கடனை முழுவதுமாக அடைத்துள்ளது.
இந்நிறுவனம், வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய 2,925 கோடி ரூபாயை திருப்பி செலுத்தி விட்டதாக அறிவித்துள்ளது.அண்மையில் இந்நிறுவனம், தொடர் பங்கு வெளியீட்டின் வாயிலாக 4,300 கோடி ரூபாய் நிதியை திரட்டியது. இதிலிருந்து, வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பி செலுத்தி உள்ளது.
இதையடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, ருச்சி சோயா, கடன் இல்லா நிறுவனமாகிவிட்டதாக, டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.தொடர் பங்கு வெளியீட்டுக்கு வரும்போது, இந்நிறுவனம், திரட்டப்படும் நிதியிலிருந்து 1,950 கோடி ரூபாயை கடனை அடைக்க பயன்படுத்த இருப்பதாக தெரிவித்திருந்தது.இருப்பினும், முழுக் கடனையும் அடைத்துவிடும் முடிவுக்கு வந்து, தற்போது 2,925 கோடி ரூபாயை செலுத்தி உள்ளது.
இந்த பணம், கடன் கொடுத்த பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டு உள்ளது.கடந்த 2019ல், பதஞ்சலி நிறுவனம், திவால் நடவடிக்கைக்கு ஆளான ருச்சி சோயாவை, 4,350 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|