நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பு நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பு ... ஆயிரம் சந்தேகங்கள்: பங்கு வர்த்தகரான எனக்கு நிலம் வாங்க கடன் கிடைக்குமா? ஆயிரம் சந்தேகங்கள்: பங்கு வர்த்தகரான எனக்கு நிலம் வாங்க கடன் கிடைக்குமா? ...
மொத்த வங்கி கடனையும் அடைத்தது ‘ருச்சி சோயா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2022
21:17

புதுடில்லி:‘ருச்சி சோயா’ நிறுவனம், கடன் இல்லா நிறுவனமாகி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ருச்சி சோயா, தன்னுடைய கடனை முழுவதுமாக அடைத்துள்ளது.

இந்நிறுவனம், வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய 2,925 கோடி ரூபாயை திருப்பி செலுத்தி விட்டதாக அறிவித்துள்ளது.அண்மையில் இந்நிறுவனம், தொடர் பங்கு வெளியீட்டின் வாயிலாக 4,300 கோடி ரூபாய் நிதியை திரட்டியது. இதிலிருந்து, வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய கடனை திருப்பி செலுத்தி உள்ளது.

இதையடுத்து, பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, ருச்சி சோயா, கடன் இல்லா நிறுவனமாகிவிட்டதாக, டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.தொடர் பங்கு வெளியீட்டுக்கு வரும்போது, இந்நிறுவனம், திரட்டப்படும் நிதியிலிருந்து 1,950 கோடி ரூபாயை கடனை அடைக்க பயன்படுத்த இருப்பதாக தெரிவித்திருந்தது.இருப்பினும், முழுக் கடனையும் அடைத்துவிடும் முடிவுக்கு வந்து, தற்போது 2,925 கோடி ரூபாயை செலுத்தி உள்ளது.

இந்த பணம், கடன் கொடுத்த பாரத ஸ்டேட் வங்கியின் தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டு உள்ளது.கடந்த 2019ல், பதஞ்சலி நிறுவனம், திவால் நடவடிக்கைக்கு ஆளான ருச்சி சோயாவை, 4,350 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)