பதிவு செய்த நாள்
09 ஏப்2022
21:19
புதுடில்லி:பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், இதுவரை இல்லாத வகையில், கடந்த மார்ச் மாதத்தில் 28 ஆயிரத்து, 463 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
பங்குச் சந்தையில் ஏற்பட்ட திருத்தத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.அன்னிய முதலீடுகள் அதிகளவில் வெளியேறி வந்த போதிலும், தொடர்ந்து 13வது மாதமாக, சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
கடந்த நிதியாண்டில் மட்டும், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், மொத்தம் 1.64 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 2020 – 21 நிதியாண்டில், கிட்டத்தட்ட 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக, பங்குச் சந்தைகள் ஏற்ற – இறக்கங்களை சந்தித்து வருகின்றன. இவற்றை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி, பலர் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|