மொத்த வங்கி கடனையும் அடைத்தது  ‘ருச்சி சோயா’ மொத்த வங்கி கடனையும் அடைத்தது ‘ருச்சி சோயா’ ... ஆயிரம் சந்தேகங்கள்: பங்கு வர்த்தகரான எனக்கு நிலம் வாங்க கடன் கிடைக்குமா? ஆயிரம் சந்தேகங்கள்: பங்கு வர்த்தகரான எனக்கு நிலம் வாங்க கடன் கிடைக்குமா? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சமபங்கு நிதிகளில் முதலீடு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2022
19:25

மியூச்சுவல் பண்டுகளில் சமபங்கு நிதிகளில் முதலீடு, மார்ச் மாத காலத்தில் அதிகரித்திருப்பதாகவும், எஸ்.ஐ.பி., முறையிலான முதலீடும் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஈக்விட்டி எனப்படும் சமபங்கு நிதிகளில், மார்ச் மாத காலத்தில் முதலீடு மூலமான நிகர வரவு மாதாந்திர அடிப்படையில், 43 சதவீதம் அதிகரித்து, 28,463.49 கோடி ரூபாயாக இருந்தது என, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


மார்ச் மாத கால முதலீடு கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் அதிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமபங்கு நிதிகளின் அனைத்து பிரிவுகளிலும் முதலீடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மல்டிகேப் பிரிவில் முதலீடு அதிகமாக உள்ளது.

செல்வந்தர் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு முதலீட்டில் காண்பித்து வரும் ஆர்வம் காரணமாக, இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.பி., எனப்படும் சீரான முதலீட்டு முறையிலான முதலீடும் அதிகரித்துள்ளது.உக்ரைன் போர் நெருக்கடி சந்தையில் ஏற்ற, இறக்கமான போக்கை உருவாக்கினாலும், பல முதலீட்டாளர்கள் இந்த சூழலை ஒரு வாய்ப்பாக கருதி, தங்கள் முதலீடு தொகுப்பில் மாற்றத்தை மேற்கொண்டு வருவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)