பதிவு செய்த நாள்
10 ஏப்2022
19:25
மியூச்சுவல் பண்டுகளில் சமபங்கு நிதிகளில் முதலீடு, மார்ச் மாத காலத்தில் அதிகரித்திருப்பதாகவும், எஸ்.ஐ.பி., முறையிலான முதலீடும் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஈக்விட்டி எனப்படும் சமபங்கு நிதிகளில், மார்ச் மாத காலத்தில் முதலீடு மூலமான நிகர வரவு மாதாந்திர அடிப்படையில், 43 சதவீதம் அதிகரித்து, 28,463.49 கோடி ரூபாயாக இருந்தது என, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாத கால முதலீடு கடந்த நான்கு ஆண்டுகளில் மிகவும் அதிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமபங்கு நிதிகளின் அனைத்து பிரிவுகளிலும் முதலீடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மல்டிகேப் பிரிவில் முதலீடு அதிகமாக உள்ளது.
செல்வந்தர் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு முதலீட்டில் காண்பித்து வரும் ஆர்வம் காரணமாக, இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.பி., எனப்படும் சீரான முதலீட்டு முறையிலான முதலீடும் அதிகரித்துள்ளது.உக்ரைன் போர் நெருக்கடி சந்தையில் ஏற்ற, இறக்கமான போக்கை உருவாக்கினாலும், பல முதலீட்டாளர்கள் இந்த சூழலை ஒரு வாய்ப்பாக கருதி, தங்கள் முதலீடு தொகுப்பில் மாற்றத்தை மேற்கொண்டு வருவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|