பதிவு செய்த நாள்
10 ஏப்2022
19:28
இளம் வயதினர் வேலையில் சேர்ந்ததுமே, ‘கிரெடிட் கார்டு’ பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கிரெடிட் கார்டு மூலம் எளிதாக பணம் செலுத்தலாம் என்பதோடு, ‘கேஷ் பேக்’ உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் ஈர்ப்புடையதாக அமையலாம்.
எனினும் கிரெடிட் கார்டு பயன்பாடு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அதன் மூலம் பயன்பெற முடியும். இல்லையெனில் கடன் வலையில் சிக்கி கொள்ளலாம். எனவே, முதல் முறை கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், கார்டு பெறுவதற்கு முன், கார்டு பயன்பாடு தொடர்பான இடர்களை அறிந்திருப்பது அவசியம்.
செலவு கட்டுப்பாடு:
கார்டில் பொருட்களை வாங்கலாம் என்பதால், விரும்பும் பொருட்களை எல்லாம் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. வட்டி இல்லா கால சலுகை இதற்கு காரணமாக அமையலாம். ஆனால், கட்டுப்பாடில்லாமல் செலவு செய்வது பாதிப்பை உண்டாக்கும். செலவு பழக்கத்தை கட்டுப்படுத்த முடிந்தால் மட்டுமே கார்டு பெற வேண்டும்.
குறைந்த தொகை:
மாதாந்திர பில் தொகையில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தும் வசதி ஈர்ப்புடையதாக இருக்கலாம். ஆனால், இந்த நிலுவை தொகைக்கான வட்டி அதிகம் என்பதால், அதிக தொகையை செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உரிய காலத்தில் பணத்தை செலுத்துவதில் உறுதி கொள்ள வேண்டும்.
கடன் சுழற்சி:
கிரெடிட் கார்டு கடனை தொடர்ந்து நிலுவையில் வைத்திருப்பதால் உண்டாகும் சுழலும் கடனுக்கு வட்டியும், அபராதமும் கூடுதலாக இருக்கும். இது கடன் வலையில் சிக்க வைத்துவிடும். பழைய கடனை அடைக்காமல், புதிதாக கடன் வாங்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
கடன் அளவு:
கிரெடிட் கார்டை எந்த அளவு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம்; கார்டுக்கு கடன் அளவு உண்டு. இந்த கடன் அளவை பெருமளவு பயன்படுத்தி கொள்வது, கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். கடன் அளவை பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டுடன் இருப்பதே கிரெடிட் ஸ்கோர் வலுவாக உதவும்.
கவனம் தேவை:
கிரெடிட் கார்டை கையாளுவதில் செய்யும் சிறு தவறும் நீண்ட கால நோக்கில் பாதிப்பை உண்டாக்கும். அதிலிருந்து மீண்டு வருவதும் கடினமாக இருக்கும். எனவே கிரெடிட் கார்டு பெறுவதற்கு முன், கார்டு பயன்பாடு தொடர்பான இடர்களை அறிந்து, பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவும், உறுதியும் இருப்பது அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|