பதிவு செய்த நாள்
11 ஏப்2022
23:15
புதுடில்லி : ‘கோல்டு பிளஸ் கிளாஸ் இண்டஸ்ட்ரி’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
கட்டுமானம், தொழிற்சாலை, வாகனம் போன்ற துறைகளுக்கு தேவையான, ‘புளோட்டிங்’ கண்ணாடிகளை தயாரிப்பதில், இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களுள், கோல்டு கிளாஸ் நிறுவனமும் ஒன்று. இப்பிரிவில், நாட்டின் தேவையில் 16 சதவீத கண்ணாடியை, இந்நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் போது 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 1.28 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கடன் அடைக்கவும், நடைமுறை மூலதன தேவைகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|