பதிவு செய்த நாள்
11 ஏப்2022
23:22
புதுடில்லி : கடந்த நிதியாண்டில் தங்கத்தின் இறக்குமதி, அதற்கு முந்தைய நிதியாண்டைவிட அதிகரித்ததால், வர்த்தகப் பற்றாக்குறையும் உயர்ந்துள்ளது.
நாட்டின் தங்க இறக்குமதி, கடந்த நிதியாண்டில், 3.51 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில், இறக்குமதி 2.63 லட்சம் கோடி ரூபாய் என குறைவாகவே இருந்தது.தங்கத்தின் இறக்குமதி அதிகரித்ததை அடுத்து, அது, கடந்த நிதியாண்டில், வர்த்தகப் பற்றாக்குறை 14.62 லட்சம் கோடி ரூபாயாக உயர, ஒரு காரணமாக அமைந்தது. இதற்கு முந்தைய நிதியாண்டான 2020 – -21ல் வர்த்தக பற்றாக்குறை 7.80 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவில், தங்கத்தின் இறக்குமதியை பொறுத்தவரை, சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் பெரும்பகுதி, ஆபரணங்கள் செய்வதற்காக இறக்குமதி ஆகிறது.கடந்த நிதியாண்டை பொறுத்தவரை, அதாவது, 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில், தங்கத்தின் இறக்குமதி 842.28 டன் என்ற நிலையை எட்டி உள்ளதாக, அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|