பதிவு செய்த நாள்
12 ஏப்2022
22:26
புதுடில்லி:பெண்களுக்கான பாரம்பரிய ஆடைகள் நிறுவனமான, ‘பிபா பேஷன்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் போது, 90 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 2.77 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்து உள்ளது.
பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனம், கடந்த 1986ம் ஆண்டில் துவங்கப்பட்டதாகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான ஆடைகளை வடிவமைப்பது, சந்தைப்படுத்துவது, விற்பனை செய்வது என பல தளங்களில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகள் மட்டுமின்றி; ஆபரணங்கள், காலணிகள், பணப்பைகள், வாசனை திரவியங்கள் என வேறு பலவற்றையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|