பதிவு செய்த நாள்
16 ஏப்2022
23:35
புதுடில்லி:தங்க நகை விற்பனையில் ஈடுபட்டுள்ள ‘சென்கோ கோல்டு’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.கோல்கட்டாவை சேர்ந்த இந்நிறுவனம், நாட்டின் பல்வேறு இடங்களில், தங்க நகை கடைகளை நடத்தி வருகிறது.
புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதன் வாயிலாக, இந்நிறுவனம் 525 கோடி ரூபாய் நிதியை திரட்டதிட்டமிட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, 325 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் உள்ள 200 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், இந்நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.
பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, பொதுவான நிர்வாக செலவுகளுக்கும், நடைமுறை மூலதன தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக, இந்நிறுவனம் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.இந்நிறுவனத்துக்கு, மொத்தம் 127 ஷோரூம்களும், நிறுவனமே நடத்தும் 70 ஷோரூம்களும், 57 பிரான்ச்சைஸ் ஷோரூம்களும் உள்ளன.கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த எட்டு மாதங்களில், நிறுவனத்தின் வருவாய் 2,467 கோடி ரூபாய் ஆகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|