பதிவு செய்த நாள்
16 ஏப்2022
23:37
புதுடில்லி:ஆஸ்திரேலியாவுக்கான சேவைகள் துறை ஏற்றுமதி, அடுத்த 5 ஆண்டுகளில், 38 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து, கவுன்சிலின் தலைவர் சுனில் எச். தலாதி கூறியதாவது:ஆஸ்திரேலியா உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, அந்நாட்டுக்கான நமது சேவைகள் துறை ஏற்றுமதி, அடுத்த 5 ஆண்டுகளில், 38 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இது, தற்போது 14 ஆயிரத்து 440 கோடி ரூபாயாக உள்ளது.
இந்த ஒப்பந்தத்தினால் தொலைத்தொடர்பு, கம்ப்யூட்டர், தகவல் பரிமாற்றம், பயணம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்முறை மற்றும் மேலாண்மை ஆலோசனை சேவைகள் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள், லாபமடையும். சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், ஆஸ்திரேலியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவை சென்றடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|