பதிவு செய்த நாள்
16 ஏப்2022
23:39
புதுடில்லி:இலங்கையில் உள்ள பங்குச் சந்தை, அடுத்த வாரம் 5 நாட்களுக்கு செயல்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவித்துவரும் நிலையில், அடுத்த வாரம் 5 நாட்களுக்கு, கொழும்பு பங்குச் சந்தை இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் பொருளாதார நிலவரத்தை கணக்கில் கொண்டு, அடுத்த வாரம் 5 நாட்களுக்கு பங்கு சந்தை செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு, கொழும்பு பங்குச் சந்தைக்கு, இலங்கை பங்கு பத்திரங்களுக்கான ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பங்குச் சந்தை செயல்பாட்டினை நிறுத்தி வைப்பதன் வாயிலாக, முதலீட்டாளர்கள், நாட்டின் பொருளாதார நிலை குறித்த முடிவுகளுக்கு வர அவகாசம் வழங்க முடியும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது உள்ள பொருளாதார நிலைமைகள் குறித்து அதிக தெளிவு பெற, முதலீட்டாளர்கள் மற்றும் பிற சந்தை பங்கேற்பாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.‘அவர்கள் தெளிவான முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு அது உதவியாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, வரும் 18ம் தேதியிலிருந்து, அடுத்த 5 நாட்களுக்கு, இலங்கையில் பங்குச் சந்தை செயல்படாது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|