பதிவு செய்த நாள்
16 ஏப்2022
23:41
புதுடில்லி:ஐ.டி.பி.ஐ., வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ராகேஷ் ஷர்மாவின் சம்பளத்தை, 10 மடங்கு அதிகரிக்க, வங்கியின் பங்குதாரர்களிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் உடனடி சீர்திருத்த நடவடிக்கையின் கீழிருந்து வங்கியை மீட்டு கொண்டு வந்ததை அடுத்து, ராகேஷ் ஷர்மாவுக்கு, சம்பளத்தை 10 மடங்காக அதிகரித்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதையடுத்து, தபால் வாயிலாக, பங்குதாரர்கள் தங்கள் இசைவை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
ஷர்மா தற்போது மாதம் 2.64 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுகிறார். இதை மாதம் 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்க, அனுமதி கோரப்பட்டுள்ளது.மேலும், இவரது பதவிக் காலத்தை, மார்ச் 19ம் தேதியிலிருந்து, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் உறுப்பினர்களிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.இந்த பதவி நீட்டிப்புக்கு, ஏற்கனவே, ரிசர்வ் வங்கி தன்னுடைய அனுமதியை வழங்கி விட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|