பதிவு செய்த நாள்
18 ஏப்2022
00:27
குடியிருப்பு திட்டங்கள் தள்ளி போவது அல்லது தடைபடுவது இந்திய ரியல் எஸ்டேட் துறையின் முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
நாட்டின் முக்கிய நகரங்களில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட குடியிருப்பு திட்டங்கள் பல்வேறு நிலைகளில் முடங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. சொந்த வீடு கனவில் இருப்பவர்களுக்கு, குடியிருப்பு திட்டங்கள் தாமதமாவது மிகப்பெரிய இன்னலாகும். குடியிருப்பு திட்டங்கள் தாமதமாகும் நிலையில், அவற்றில் வீடு வாங்க ஒப்பந்தம் செய்த வாடிக்கையாளர்கள் முன் இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
ஆணையத்தில் புகார்: குடியிருப்பு திட்டங்கள் தாமதம் ஆகும் போது, வாடிக்கையாளர்கள் செய்யக்கூடிய முதல் விஷயம், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்திடம் புகார் அளிப்பதாகும். புகாரை விசாரிக்கும் ஆணையம், பணத்தை திரும்பி அளிக்க உத்தரவிடலாம் அல்லது திட்டத்தை முடிக்க அழுத்தம் தரலாம்.நஷ்ட ஈடு: குடியிருப்பு திட்டங்கள் பல்வேறு காரணங்களுக்காக தாமதம் ஆகலாம்.
ஆனால், தாமதம் ஆகும் காலத்தில் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கடனுக்கான தவணை செலுத்தும் நெருக்கடிக்கு உள்ளாகலாம். தாமதம் ஆகும் காலத்தில், அதற்கு ஈடான பணம் பெறும் உரிமை வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது.மேல் முறையீடு: குடியிருப்பு திட்டங்கள் தாமதமாகும் போது, வீடு ஒப்படைக்கும் வரை ஒவ்வொரு மாதமும் பொருத்தமான வட்டி தொகை அளிக்க உத்தரவிடப்படலாம். இந்த தொகையை ஆணையம் தீர்மானிக்கும். ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம்.வழக்கு போடலாம்: ரியல் எஸ்டேட் ஒழுங்முறை ஆணைய சட்டப்படி, குடியிருப்பு தொடர்பாக சிவில் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது என்றாலும், தேசிய நுகர்வோர் பிரச்னை விசாரணை ஆணையத்தில் முறையீடு செய்யலாம். மாநில அளவில் இத்தகைய ஆணையங்கள் இருப்பதோடு, முக்கிய நகரங்களிலும் உள்ளன.
கடன் தவணை: குடியிருப்பு திட்டங்கள் தாமதமாகும் நிலையில், வீட்டுக்கடனுக்கான மாத தவணையை செலுத்தாமல் இருப்பது பல்வேறு சிக்கல்களை உண்டாக்கலாம். எனவே, தவணை தவறாமல் செலுத்தி இந்த பிரச்னையில் இருந்து வெளியே வரும் வழியை பார்க்க வேண்டும். குடியிருப்பு திட்டங்கள் முன்னேற்றத்தை கவனித்து, உரிய காலத்தில் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|