பதிவு செய்த நாள்
18 ஏப்2022
00:32
தங்க சேமிப்பு பத்திரங்களை முதிர்வுக்கு முன் விலக்கிக் கொள்வதற்கான அட்டவனையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த வாய்ப்புக்கு பொருத்தமான பத்திரங்கள் வெளியீடு விபரங்களையும் வெளியிட்டுள்ளது.காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக ரிசர்வ் வங்கியின் தங்க சேமிப்பு பத்திரங்கள் அமைகின்றன. இந்திய அரசு சார்பில், கடந்த 2015ம் ஆண்டு முதல், வரிசையாக சேமிப்பு பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.
இந்த பத்திரங்கள் எட்டு ஆண்டு முதிர்வு கொண்டவை. முதலீடு காலத்தில் வட்டி அளிக்கப்படுகிறது. முதலீடு செய்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், பத்திரங்களை முன்னதாக விலக்கிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது.தங்க சேமிப்பு பத்திரங்களை முன்னதாக விலக்கிக் கொள்வதற்கான அட்டவணை மற்றும் வழிமுறையை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2015 நவம்பர் முதல், 2017ல் இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட பத்திரங்கள் வரை முன்னதாக விலக்கிக் கொள்ளலாம். ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை, இதற்கான அவகாசம் பல்வேறு கட்டங்களாக அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|