பதிவு செய்த நாள்
19 ஏப்2022
02:32
புதுடில்லி : கடந்த நிதியாண்டில், பயணியர் வாகன ஏற்றுமதி 43 சதவீதம் அதிகரித்திருப்பதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான ‘சியாம்’ தெரிவித்துள்ளது.கடந்த நிதியாண்டில், மொத்தம் 5.79 லட்சம் வாகனங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
இதில், ‘மாருதி சுசூகி’ மட்டும் 2.3 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து, முதல்இடத்தை பிடித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில், மொத்த வாகனங்கள் ஏற்றுமதி 4.04 லட்சமாக இருந்தது.கார் ஏற்றுமதியை மட்டும் பொறுத்தவரை, மார்ச்சில் 42 சதவீதம் அதிகரித்து உள்ளது. இம்மாதத்தில் மொத்தம் 3.75 லட்சம் கார்கள், ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
மாருதி சுசூகி நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ மற்றும் ‘கியா இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் அதிக அளவிலான வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன.ஹூண்டாய் 1.29 லட்சம் வாகனங்களையும்; கியா இந்தியா 50 ஆயிரத்து 864 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளன.உள்நாட்டு தேவையை சமாளிக்க, போதுமான அளவுக்கு செமிகண்டக்டர்கள் கிடைக்காத போதிலும்; ஏற்றுமதிக்கு தேவையான செமிகண்டக்டர்கள் கிடைத்ததால், அதிகம் ஏற்றுமதி செய்ய முடிந்ததாக, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|