பதிவு செய்த நாள்
19 ஏப்2022
02:32
புதுடில்லி, ஏப். 19–
நாட்டின் மிகப் பெரிய பயணியர் வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி இந்தியா’, அதன் அனைத்து மாடல் வாகனங்களின் விலையையும், அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்நிறுவனம், சராசரியாக 0.9 சதவீதத்திலிருந்து 1.9 சதவீதம் அளவுக்கு வாகனங்களின் விலையை உயர்த்தி இருப்பதாக, கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு தெரிவித்துள்ளது.வாகன தயாரிப்பில், உள்ளீட்டு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, விலையை உயர்த்தி இருப்பதாக, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. மேலும் இவ்விலை அதிகரிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.மாருதி சுசூகி நிறுவனம், ‘ஆல்ட்டோ’ முதல் ‘எஸ்.கிராஸ்’ வரை, பல்வேறு விதமான பயணியர் வாகனங்களை தயாரித்து வழங்கி வருகிறது.இந்நிலையில், உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வினால், தொடர்ந்து வாகனங்களின் விலையையும் இந்நிறுவனம் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு ஜனவரியிலிருந்து இதுவரையிலான காலத்தில், இந்நிறுவனம், கிட்டத்தட்ட 8.8 சதவீதம் அளவுக்கு, வாகனங்களின் விலையை உயர்த்தி அறிவித்து உள்ளது.மாருதி சுசூகி மட்டுமின்றி; நாட்டில் உள்ள பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களும், உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு காரணமாக, வாகனங்களின் விலையை அதிகரித்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|