பதிவு செய்த நாள்
19 ஏப்2022
21:18
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து அறிவித்துள்ளது. இதை பின்பற்றி, ஆக்சிஸ், கோட்டக் மகிந்திரா ஆகிய வங்கிகள் வட்டியை அதிகரித்து அறிவித்துள்ளன.
மற்ற வங்கிகளும் விரைவில் வட்டியை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கலாம். எஸ்.பி.ஐ., வட்டியை அதிகரித்ததை அடுத்து, வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களுக்குமான மாதாந்திர தவணை தொகையும் அதிகரிக்கும் என்பதால், கடன் வாங்கியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
எஸ்.பி.ஐ., அது வழங்கும் கடனுக்கான வட்டியை, 10 அடிப்படை புள்ளிகள் அதாவது, 0.1 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது, அனைத்து வகையான கால அளவிலான கடன்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த வட்டி விகித உயர்வு, ஏப்ரல் 15 முதல் அமல்படுத்தப்படும் என்று எஸ்.பி.ஐ., அதன் இணைய தளத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர்., விகிதம், தற்போதைய 7 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதமாக அதிகரிக்கும்.
இதேபோல், இரண்டு ஆண்டுக்கான எம்.சி.எல்.ஆர்., 7.30 சதவீதமாகவும்; மூன்று ஆண்டுக்கான விகிதம் 7.40 சதவீதமாகவும் இருக்கும்.எஸ்.பி.ஐ., அறிவிப்பை பின்பற்றி, ஆக்சிஸ் வங்கி 5 அடிப்படைப் புள்ளிகள் வட்டியை அதிகரித்து உள்ளதாக அறிவித்துள்ளது. மற்ற வங்கிகளும், விரைவில் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|