‘இன்போசிஸ்’ முதலீட்டாளர்களுக்கு ரூ.54 ஆயிரம் கோடி இழப்பு ‘இன்போசிஸ்’ முதலீட்டாளர்களுக்கு ரூ.54 ஆயிரம் கோடி இழப்பு ...  நிதி நிறுவன மோசடிகளை தடுக்க அரசுக்கு கடுமையான பரிந்துரைகள் நிதி நிறுவன மோசடிகளை தடுக்க அரசுக்கு கடுமையான பரிந்துரைகள் ...
வட்டியை உயர்த்திய எஸ்.பி.ஐ., கடன் வாங்கியவர்கள் கலக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
21:18

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து அறிவித்துள்ளது. இதை பின்பற்றி, ஆக்சிஸ், கோட்டக் மகிந்திரா ஆகிய வங்கிகள் வட்டியை அதிகரித்து அறிவித்துள்ளன.


மற்ற வங்கிகளும் விரைவில் வட்டியை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கலாம். எஸ்.பி.ஐ., வட்டியை அதிகரித்ததை அடுத்து, வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களுக்குமான மாதாந்திர தவணை தொகையும் அதிகரிக்கும் என்பதால், கடன் வாங்கியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

எஸ்.பி.ஐ., அது வழங்கும் கடனுக்கான வட்டியை, 10 அடிப்படை புள்ளிகள் அதாவது, 0.1 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது, அனைத்து வகையான கால அளவிலான கடன்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த வட்டி விகித உயர்வு, ஏப்ரல் 15 முதல் அமல்படுத்தப்படும் என்று எஸ்.பி.ஐ., அதன் இணைய தளத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஓராண்டுக்கான எம்.சி.எல்.ஆர்., விகிதம், தற்போதைய 7 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதமாக அதிகரிக்கும்.

இதேபோல், இரண்டு ஆண்டுக்கான எம்.சி.எல்.ஆர்., 7.30 சதவீதமாகவும்; மூன்று ஆண்டுக்கான விகிதம் 7.40 சதவீதமாகவும் இருக்கும்.எஸ்.பி.ஐ., அறிவிப்பை பின்பற்றி, ஆக்சிஸ் வங்கி 5 அடிப்படைப் புள்ளிகள் வட்டியை அதிகரித்து உள்ளதாக அறிவித்துள்ளது. மற்ற வங்கிகளும், விரைவில் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)