பதிவு செய்த நாள்
19 ஏப்2022
21:25
புதுடில்லி : அண்மைக் காலமாக, நிதி நிறுவனங்களில் மோசடிகள், திவால்கள் போன்றவை அதிகரித்து வருவதை அடுத்து, நிறுவன சட்டக் குழுவானது, நிதி நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை குறித்து, கடுமையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளது.
அதில், இத்தகைய நிதி நிறுவனங்களை பதிவு செய்யும்போதே அதிக கவனம் செலுத்துதல், இவற்றின் நிதி நிறுவனம் எனும் அந்தஸ்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசீலனை செய்து வழங்குவது, இந்நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு, திட்டங்களை உருவாக்குவதற்கு அரசுக்கு அதிகாரம் அளித்தல் உட்பட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
பெருநிறுவனங்கள் விவகாரத் துறை செயலர் ராஜேஷ் வர்மா தலைமையிலான 11 பேர் இந்த குழுவில் இடம்பெற்று உள்ளனர். லட்சக்கணக்கான டெபாசிட்தாரர்களையும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியையும் கொண்ட பல முன்னணி நிதி நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்றுள்ளன.விவேகமற்ற கடன் மற்றும் தவறான நிர்வாகத்தின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை நிறுவன சட்டக் குழு வழங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் உள்ளன.சில மாநிலங்களில், இத்தகைய நிதி நிறுவனங்கள் மிக அதிகமாக இருப்பது, அந்நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தையே சந்தேகிக்க வேண்டி இருப்பதாக, இக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|