வட்டியை உயர்த்திய எஸ்.பி.ஐ., கடன் வாங்கியவர்கள் கலக்கம் வட்டியை உயர்த்திய எஸ்.பி.ஐ., கடன் வாங்கியவர்கள் கலக்கம் ...  ஏற்றுமதி 37 சதவீதம் அதிகரிப்பு ஏற்றுமதி 37 சதவீதம் அதிகரிப்பு ...
நிதி நிறுவன மோசடிகளை தடுக்க அரசுக்கு கடுமையான பரிந்துரைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2022
21:25

புதுடில்லி : அண்மைக் காலமாக, நிதி நிறுவனங்களில் மோசடிகள், திவால்கள் போன்றவை அதிகரித்து வருவதை அடுத்து, நிறுவன சட்டக் குழுவானது, நிதி நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை குறித்து, கடுமையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளது.


அதில், இத்தகைய நிதி நிறுவனங்களை பதிவு செய்யும்போதே அதிக கவனம் செலுத்துதல், இவற்றின் நிதி நிறுவனம் எனும் அந்தஸ்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசீலனை செய்து வழங்குவது, இந்நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு, திட்டங்களை உருவாக்குவதற்கு அரசுக்கு அதிகாரம் அளித்தல் உட்பட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

பெருநிறுவனங்கள் விவகாரத் துறை செயலர் ராஜேஷ் வர்மா தலைமையிலான 11 பேர் இந்த குழுவில் இடம்பெற்று உள்ளனர். லட்சக்கணக்கான டெபாசிட்தாரர்களையும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியையும் கொண்ட பல முன்னணி நிதி நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்றுள்ளன.விவேகமற்ற கடன் மற்றும் தவறான நிர்வாகத்தின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.


இதை தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை நிறுவன சட்டக் குழு வழங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் உள்ளன.சில மாநிலங்களில், இத்தகைய நிதி நிறுவனங்கள் மிக அதிகமாக இருப்பது, அந்நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தையே சந்தேகிக்க வேண்டி இருப்பதாக, இக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)